About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Thursday, August 30, 2012

குச்சுபுடி நாட்டியம்



கானமுகுந்த ப்ரியா சார்பில் டி.என். ராஜரத்தினம் பிள்ளை அரங்கத்தில் நடந்த ‘குச்சுப்புடி’ நடனம் மிகவும் சிலாக்கியமானது. முதலில் கடவுள் அஞ்சலியில், விமலா ஈஸ்வரன், சந்தியா தினேஷ் இருவரும் மிக அற்புதமாக நடனம் செய்தனர். 

பின்னர் சந்தியா தினேஷ் மட்டும் ஸ்ரீமத் நாராயணீயத்தில் வரும் ஒரு ஸ்லோகத் திற்கு ‘அக்ரே பஸ்யாமி தேஜோ நிபிடதர’ தன் கண் மூலம் காயாம் பூக்குவைப் போல் மிகவும் அழகியதொரு ஒளிப்பிழம்பை யும், அழகுமிக்க ஒரு திவ்ய ஸ்வபேத்தை யும், நாரதர் முதலிய ரிஷிகளாலும், சுந்தர மண்டலங் களாலும் கண்டு புளகாங்கிதம் அடைந்தேன்’ - நடனமணி தனது இரு கைகளையும் ஒன்றுசேர்த்து கண்களில் ஓர் அதிசயத்தை பார்க்கிற மாதிரியும், அங்க அசைவுகளும், அடவுகளும், நேர்த்தியான முக பாவங்களுடன், வெகு நளினமாகவும் வெவ்வேறு கோணங்களில் நின்று ஆடினாள்.

அடுத்து விமலா ஈஸ்வரன் பைரவி ராகத்தில் அமைந்த ‘சத்யபாமா... பாவனே!’ என்ற சாஹித்தியத்திற்கு அழகு நடை நடந்து, ஒரு பக்கமா சாய்ந்தும், தன்னுடைய நீண்ட குழலையும் முன்புறம் விட்டு, கண்களில் ஒளிமின்ன, முகத்தில் அனைத்து பாவங்களையும் கொணர்ந்து, தான் அழகிலும், கண் வீச்சிலும், ருக்மணியைவிட தன்னைத்தான் கண்ணன் விரும்புவான், விரும்பிக் கொண்டு இருக்கிறான் என்று கண்ணன் மீது தீராத ஆசையை வெளிப்படுத்தினாள். இவருடைய கால் அசைவுகள், கை அசைவுகள், கண்ணின் தீட்சண்யம், ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் வெகு நேர்த்தியாக நடனம் செய்தார்.

இறுதியாக, தில்லானாவில் இருவரும் வெகு சுறுசுறுப்பாகவும், ஜதிகளுக்கு தகுந்த மாதிரி தங்களை நிலைப்படுத்திக் கொண்டு, அந்த அரங்கையே சுற்றி சுற்றி, வலம் வந்து, வெகு நேர்த்தி யாகவும் அமர்க்களமாகவும், குச்சுபுடி நடனம் செய்து ரசிகர்களை சொக்க வைத்தனர். குரு வேதாந்தம் ராமு அள்ளி வீசிய அழகான ஜதிக் கோர்வைகள்  மிகவும் அருமையாக இருந்தது. பாடகர் கோமதி நாயகம் வெகு அழகாகப் பாடி எல்லோருடைய மனதில் இடம் பிடித்தார். மிருதங்கம் பனிக்குமார் வயலின் சோழியபுரம் சங்கர்,புல்லாங்குழல் சங்கர நாராயணன் ஆகியோரும் தங்களுடைய பங்கினைச் சிறப்பாக செய்தனர்.

வேதாந்தம் ராமுவின் சிஷ்யைகள் இருவரும் வந்திருந்த ரசிகர்கள் மனம் குளிர நடன மாடினார் கள்.
-  ராகப்ரியன்


No comments:

Post a Comment