About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Friday, July 19, 2013

சாய்பாபா - 11வது நாள் அதிசயம்

மயிலாப்பூரில் வசித்து வருகிறார் ஒரு பெண்மணி. நீண்ட காலமாக தனது கையைத் தூக்க முடியாமல் அவதிபட்டுக் கொண்டிருந்தார். பார்க்காத மருத்துவம் இல்லை. பார்க்காத மருத்துவரில்லை. எல்லாவித சிகிச்சைகள் செய்தும் பலனில்லை. கைவலி அதிகமானதே தவிர. குறைந்ததாகத் தெரியவில்லை. ஆபரேஷன் செய்யும் அளவிற்கு சென்றுவிட்டது. 

மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகில் குடிவந்தார். பாபா கோவிலுக்குத் தினமும் சென்றார். பாபாவிடம் மனமுருக வேண்டினார். பாபாவின் திருவுருவச் சிலைக்கு (பிரபை) பின்புறம் சுவற்றில் பாபாவின் திருவுருவப் படம் வரையப்பட்டிருக்கும். படத்தின் காலடிகளை அனைத்து பக்தர்களும் தொட்டு வணங்கிச் செல்வதைக் கண்ட பெண்மணியும் தொட்டு வணங்க முயன்றார். முடியவில்லை. பாபாவின் பாதங்களைத் தொட்டு நம்மால் வணங்க முடியவில்லையே என்று கண்கலங்கினார். 

கைகளைச் சுவற்றில் வைத்து, ‘பாபா, உன் பாதங்களை என்னால் தொட்டு வணங்கமுடியவில்லை. என்னால் கையைத் தூக்க முடியவில்லை. கைவலி அதிகமாக உள்ளது. இந்த வலியெல்லாம் நீங்கி நான் மேலே உள்ள உன் பாதங்களை தொட்டு வணங்க நீதான் அருள் செய்யவேண்டும்’ என்று பாபாவிடம் மனமுருக வேண்டினார். பாபாவை தினம் தினம் வேண்டினார். பாபாவின் பாதங்களைத் தொட முயன்றார். 11வது நாள் அந்த ஆச்சரியம் நடந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல மெல்ல கைகள் மேலே உயர்ந்து உயர்ந்து இன்று பாபாவின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். தினசரி காலையில் மயிலை சாய்பாபா கோவிலுக்குச் சென்று பாபாவை வணங்கி வருகிறார்.அவரைப் போல பக்தர்களும் பாபாவின் ஆசியைப் பெறுங்கள்.

No comments:

Post a Comment