About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Wednesday, December 7, 2011

அனைவருக்கும் கல்வி

.
அனைவருக்கும் கல்வி என்ற கருத்தை வலியுறுத்தி 03.12.2011 அன்று காலை 7.30 மணிக்கு சென்னை சாந்தோம் கடற்கரையிலுள்ள காந்தி சிலையிலிருந்து ஔவையார் சிலை வரை ஆர்.ஏ. புரத்திலுள்ள சில்வர் என் ஸ்பிரிங்ஸ் பள்ளியின் சார்பில், 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சுமார் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் ஊர்வலமாக அணிவகுத்துச் சென்றனர். 

அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு குழந்தைகளையும் (Special Children) சேர்க்க வேண்டுமென்பதை வலியுறுத்தியும், அவர்களும் நம்மில் ஒருவர் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் இந்த ஊர்வலம் நடக்கிறது என்பதை பள்ளித் தலைமையாசிரியர் சுதாஜீவன்தாஸ் தெரிவித்தார். அமைதியாக நடைபெற்ற ஊர்வலத்தில் மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசுரங்களைத் தூக்கிச் சென்றனர். மாணவர்களுக்கு உறுதுணையாக ஆசிரியர்களும், பெற்றோர்களும் நிகழ்ச்சி கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை கடற்கரையில் வாக்கிங் செல்பவர்கள் பலரும் கூர்ந்து கவனித்தது குறிப்பிடதக்கது




No comments:

Post a Comment