About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Wednesday, December 7, 2011

எஸ்.வி. சகஸ்ரநாமம் நூற்றாண்டு விழா தொடக்கம்


29.11.2011 அன்று மயிலாப்பூர் கோகலே அரங்கத்தில் எஸ்.வி. சகஸ்ரநாமம் நூற்றாண்டு விழா தொடக்க விழா இயக்குநர் எஸ்.பி. முத்து ராமன் தலைமையில் நடைபெற்றது. 

சகஸ்ரநாமத்தின் புதல்வர் எஸ்.வி.எஸ். குமார் வரவேற்புரையாற்ற, விழாக்குழுச் செயலாளர் கலைமாமணி பி.ஆர். துரை அறிமுகவுரை யாற்றினார். 

சகஸ்ரநாமம் திருவுருவப் படத்தினை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றச் செயலாளர் பி.எஸ். சச்சு திறந்துவைத்தார். மூத்தக் கலைஞர்கள் எஸ்.என். லட்சுமி, டி.எம். சாமிக்கண்ணு ஆகியோரை பாராட்டி, பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கி கௌரவித்தார் இயல், இசை, நாடக மன்றத் தலைவர் தேவா. 

நூற்றாண்டு விழா திட்டத்தின் விளக்கவுரையை விழாக் குழுத் துணைத் தலைவர் டி.வி. வரதராஜன் வழங்கினார்.  நன்றியுரை விழாக்குழுத் தலைவர் சக்தி சித்தார்த்தன் வழங்கினார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் பொருளாளர் சி.வி. சந்திரமோகன்.

No comments:

Post a Comment