About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Saturday, September 29, 2012

தேசிய விருது பெற்ற மயிலை ஆசிரியர்



முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப். 5ம் தேதி புதுதில்லியில் இந்திய குடியμசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சர் சிவசாமி கலாலயா உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜி. பாண்டியனுக்கு சிறந்த ஆசிரியருக்கான விருதினை வழங்கினார். தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட் 22 சிறந்த ஆசிரியர்களில் இவரும் ஒருவர். ஒரு கல்லூரியில் கணித உதவிப் பேμõசிரியμõகப் பணித் தொடங்கிய பாண்டியன், ஆசிரியர் பணிக்கு வந்து 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக மந்தவெளி யிலுள்ள சர். சிவசாமி கலாலயா பள்ளியில் முதல்வμõக பணியாற்றி வருகிறார். 2009.10ல் தமிழக நல் ஆசிரியர் விருதையும் பெற்றுள்ளார். செப். 10ம் தேதி ஆர்.கே. சுவாமி அரங்கத்தில் தேசிய விருது பெற்ற இவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தியது பள்ளி நிர்வாகம். கூட்டத்தில் பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் கலந்துகொண்டு ஆசிரியர் ஜி. பாண்டியனைப் பாராட்டி, வாழ்த்தினார்கள். கல்வித் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்ட இவர் தேசிய அளவிலான NCERTயின் வணிகக் கணிதத்தின் பாடத் திட்டக் குழுவிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.

No comments:

Post a Comment